இலங்கை: காரை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநரை சுட்டுக் கொன்ற கடற்படையினர்

முஸ்லிம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளையில் இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று அதிகாலை நடத்தப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

வத்தளை - ஹணுபிட்டிய பகுதியில் நேற்றிரவு கடற்படையினரால் விசேட சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது காரை நிறுத்துமாறு கடற்படையினர் சமிக்ஞை விடுத்த போதிலும், ஓட்டுநர் காரை நிறுத்தாமல் சென்றதாக போலீஸார் குறிப்பிட்டனர்.

இதையடுத்து, சந்தேகத்திற்கிடமாக காரை நோக்கி கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர்.

கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் காரின் ஓட்டுநர், 34 வயதான ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கொழும்பின் மற்றுமொரு புறநபர் பகுதியான கிரிபத்கொடை பகுதியிலுள்ள கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கி பிரயோகத்தில் காரின் ஓட்டுநர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

கடற்படையின் உத்தரவை மீறி பயணித்தமையே இந்த துப்பாக்கி பிரயோகங்கள் நடத்தப்பட காரணம் என போலீஸார் தெரிவிக்கின்றர்.

இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை போலீஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து ஆரம்பித்துள்ளனர்.

சாய்ந்தமருது துப்பாக்கிச்சண்டையில் படையினரால் கொல்லப்பட்டாரா அஸ்ரிபா? | sri lanka bombings |

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :