கழுத்தறுப்பு செய்கை செய்த அதிகாரி மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது - இலங்கை அரசு

பட மூலாதாரம், TWITTER
பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை கைது செய்யுமாறு லண்டன் வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் நேற்று (21) விடுத்த உத்தரவு தொடர்பில், பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
வியன்னா (Vienna) மாநாட்டு உடன்படிக்கையின் பிரகாரம், கடமைகளுக்கான பிரித்தானியாவிற்கு வருகைத் தந்த ராஜதந்திர அதிகாரி ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியாது என பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது.
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ பிரித்தானியாவில் தற்போது தொடர்ந்து வசிக்கவில்லை என்பதனையும் உயர்ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.

பட மூலாதாரம், TWITTER
2018ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தின வைபவம், பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றபோது, உயர்ஸ்தானிகராலயத்திற்கு வௌியில் புலம்பெயர் தமிழ் மக்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.
இதன்போது, ஆர்ப்பாட்டங்காரர்களை அச்சுறுத்தும் வகையில் உயர்ஸ்தானிகர் அலுவலக மேல் மாடியிலிருந்து பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ சைகை மேற்கொண்டதாக குற்றஞ் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்தை அடுத்து பிரியேடியர் பிரியங்க பெர்னாண்டோ நாட்டிற்கு வரவழைக்கப்பட்டதுடன், அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து இராணுவ மட்டத்தில் விளக்கம் பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.
இதனையடுத்து, மீண்டும் பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் அவர் பதவியில் அமர்த்தப்பட்டிருந்தார்.

பட மூலாதாரம், TWITTER
இந்த நிலைமையின் கீழ், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் செயற்பாட்டிற்கு எதிராக பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தினால் விசாரணைகள் நடாத்தப்பட்டு வந்திருந்தது.
இந்த பின்னணியில், சம்பவம் தொடர்பில் லண்டனிலுள்ள வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, விசாரணைகள் இடம்பெற்று வந்திருந்தன.
இவ்வாறு இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போதே, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு லண்டனில் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணை உத்தரவு தொடர்பில் தாம் சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












