இலங்கை : கடையடைப்பு போராட்டத்தால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை (புகைப்படத் தொகுப்பு)
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசு பொறுப்பு கூற வேண்டும் எனவும் தமிழ் அரசியல் கைதகிளை விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் வியாழனன்று முழு கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் புகைப்படத் தொகுப்பு.
படக்குறிப்பு, இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசு பொறுப்பு கூற வேண்டும் என கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் வியாழனன்று முழு கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
படக்குறிப்பு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்ட நகரங்களில் கடைகள் மூடப்பட்டு வர்த்தக நடவடிக்கைகள் முடங்கிப் போயின.
படக்குறிப்பு, தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டன.
படக்குறிப்பு, அரச பேருந்துகள் சில குறுகிய தூர சேவையில் ஈடுபட்டிருந்த போதிலும் பயணிகளின்றி வெறுமனே ஓடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
படக்குறிப்பு, போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டிருப்பதனால் பாடசாலை செல்லும் மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்லவில்லை.
படக்குறிப்பு, கடந்த 63 தினங்களாக சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஏ9 வீதியில் வீதிமறிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படக்குறிப்பு, கிளிநொச்சியில் பேராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஆதரவாக கிளிநொச்சி வர்த்தகர் சங்கம் உள்ளிட்ட பொது அமைப்புக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படக்குறிப்பு, ஏ9 வீதியில் சாலை மறிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள்.