கேரளா வெள்ளம்: தண்ணீர் வடிந்துள்ள நிலையில் பாம்புகள் பற்றி எச்சரிக்கை
கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு பின்னர், தற்போது தண்ணீர் வடிந்துள்ள நிலையில், தற்காலிக முகாம்களில் இருந்து வீடுகளுக்கு திரும்புகின்ற பாதிக்கப்பட்டோருக்கு வீடுகளில் புகுந்திருக்கும் பாம்புகள் பற்றி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளிலிருந்த அலமாறிகளுக்குள், தரைவிரிப்புகளுக்கு கீழ் அல்லது சலவை எந்திரங்களுக்குள் பாம்புகள் இருக்கலாம் என்ற பீதிக்கு மத்தியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாம்பு பிடிக்கும் குழுக்கள் பல பணியில் அமர்த்தப்பட்டுள்ளன.
வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மருத்துவமனைகளில் விஷமுறிவு மருந்துகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன.
கேரளாவில் ஏற்பட்ட நூறு ஆண்டுகள் கண்டிராத வெள்ளப்பெருக்கால் ஒரு லட்சத்துக்கு மேலானோர் இடம்பெயர்ந்து ஆயிரக்கணக்கான நிவாரண முகாம்களில் தங்கியிருக்க வேண்டியதாயிற்று.
இந்நேரத்தில் பாம்புகள், தேள்கள் மற்றும் பிற பூச்சிகள் வீடுகளுக்குள் புகுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
10 அடி நீளமுடைய மலைப்பாம்பு தோட்டத்தில் நுழையாமல் இருக்க பெண்ணொருவர் துடைப்பம் கொண்டு தடுக்க முயலும் காணொளி சமூக வலைதங்களில் பகிரப்பட்டுள்ளது.
தீவிர வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட வட மற்றும் மத்திய கேரளாவிலுள்ள பல மருத்துவமனைகளில் பாம்பு கடிக்கு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


எர்ணாகுளம் மாவட்டத்தில் மட்டும் தான் 5 நல்லபாம்புகளை பிடித்துள்ளதாக பாம்பு பிடிக்கும் உள்ளூரை சேர்ந்த வாவா சுரேஸ் ஹிந்துஸ்தான் டைம்ஸிடம் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
"ஒரு பாம்பு வீட்டின் இரண்டாவது மாடியிலுள்ள துணி வைக்கும் அலமாறியில் இருந்தது. இன்னொன்று வீட்டிலிருந்த அலமாறி ஒன்றில் உள்ளே இருந்தது" என்று அவர் கூறினார்.
தங்களின் வீடுகளுக்கு செல்வோர் தடியை பயன்படுத்தி உடமைகளை இடம்மாற்றி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு்ள்ளதாக 'பிரஸ் ட்ரஸ்ட் ஆப் இந்தியா' தகவல் வெளியிட்டுள்ளது.
'' என் மகளையும் சொந்த வீட்டையும் வெள்ளம் காவு வாங்கியது'' - கண்ணீர் சிந்தும் கேரள பெண்
பிற செய்திகள்:
- வெளியுறவுச் செயலரின் வட கொரிய பயணத்தை டிரம்ப் ரத்து செய்ய சொன்னது ஏன்?
- முதல்முறையாக தங்கம் வெல்லாத இந்தியா : கபடியில் ஆதிக்கம் முடிவு பெறுகிறதா?
- பாலத்தீனர்களுக்கான உதவியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவிப்பு
- 'எப்படி இவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறீர்கள்?' - பிரகாஷ் ராஜிடம் கேட்ட கருணாநிதி
- ''வெறுப்புணர்வை பரப்பி நாட்டை பிளவுபடுத்துகிறது பாஜக, ஆர்எஸ்எஸ்''
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













