பிரெக்ஸிட் பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தில் உடன்பாடு

பட மூலாதாரம், Getty Images
வருங்காலத்தில் பிரிட்டன் - ஐரோப்பிய ஒன்றியம் உறவுமுறை குறித்த பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும் வகையில், பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளில் போதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவரான ஜோன் கிளவுட் ஜங்கர் தெரிவித்துள்ளார்.
அயர்லாந்து எல்லைகள் விவகாரம் குறித்து இரவு நடந்த பேச்சுவார்த்தையடுத்து, வெள்ளிக்கிழமை காலை பிரசல்ஸ் வந்தடைந்தார் பிரிட்டன் பிரதமர் தெரீசா மே.
கடுமையான எல்லை கோட்பாடுகள் இருக்காது என்று கூறிய பிரதமர், குட் ஃப்ரைடே ஒப்பந்தம் உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.
இதனால், பிரிட்டனில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள், "முன் வாழ்ந்தது போல தொடர்ந்து வாழலாம்".
"தற்போது எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு ஒரு சமரச நிலைதான்" என செய்தியாளர்களிடம் பேசிய கிளவுட் ஜங்கர் தெரிவித்தார்.
"பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் நடந்த பேச்சுவார்த்தைகள் கடினமாக இருந்ததாக" அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையை எட்ட "இரு தரப்பிலும் பல கொடுக்கல் வாங்கல்கள் தேவைப்பட்டது" எனவும் தெரீசா மே கூறினார்.
பிற செய்திகள்:
- 'நீங்கள் வரவேண்டாம் பென்ஸ்!': அமெரிக்கா-பாலத்தீனம் இடையேயான பேச்சுவார்த்தை ரத்து?
- ஜெருசலேம் சர்ச்சை: அமெரிக்க முடிவுக்குப் பல நாடுகள் எதிர்ப்பு
- பாபர் மசூதி இடிப்பின் 25-ம் ஆண்டு: இந்து தேசியவாதம் வளர்ந்தது எப்படி?
- தேர்தல் அலுவலரை மிரட்டினாரா விஷால்?
- ராஜஸ்தானில் `லவ் ஜிஹாத்' - முஸ்லிமை கொன்று எரித்த இந்து இளைஞர் கைது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












